வேளாங்கன்னியின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் அது ஆரோக்கிய அன்னையின் பேராலயம் ஆகும். கிபி 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கிபி 1771ல் பங்குத் தளமாக உயர்வு பெற்றது.
பின் 1962ல் திருந்தந்தை 23ஆம் அருள் சின்னப்பரால் இந்த ஆலயம் சிறப்பு அந்தஸ்து பெற்று சிறிய பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்த பேராலயம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்காகத் திறந்தே இருக்கும்.
தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 8 மொழிகளில் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பள்ளி நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலை அன்னையின் ஜெபமாலையும் அதனைத் தொடர்ந்து நவநாள் பிரார்த்தனையும் நடைபெறும்.
1974 - 75களில், பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து அன்னையின் பசிலிக்காவின் தோற்றத்தைப் போன்ற ஒரு புதிய ஆலயமும் வேளாங்கன்னி பேராலயத்தோடு இணைத்துக் கட்டப்பட்டது.
தற்போது வேளாங்கன்னி 'கிழக்கின் லூர்து' என்று பெருமையாக அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் கொடி ஏற்றப்பட்டு, செப்டம்பர் 8 வரை தொடர்ந்து 10 நாள்கள் வேளாங்கன்னியில் அன்னை மரியாவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் கிறிஸ்துமஸ் விழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் போது பக்தர்களின் கூட்டம் வேளாங்கன்னியில் அலை மோதும். அதுபோல் மற்ற நாள்களிலும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம்.