பாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோயிலுக்காக புகழ் பெற்றுள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலையுச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.
கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும் பாலமதி ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமாக அதே சமயம் அவ்வளவாக பிரபலமாகாமல் அமைந்துள்ளது. வேலூர் பகுதியின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பயணிகள் இந்த மலை நகரத்துக்கு விஜயம் செய்யலாம்.
பாலமதிக்கு அருகிலுள்ள காங்கேயநல்லூரில் உள்ல பழமையான சுப்ரமணியர் கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையுடையதாக சொல்லப்படுகிறது. இது 20 ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
உள்ளூர் மக்கள் மத்தில் முக்கிய ஆன்மீகத்தலமாக விளங்கும் இக்கோயிலில் பங்குனி மாத உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் மற்றும் மஹா சிவராத்திரி போன்ற திருவிழாக்களும் இங்கு விசேஷமாக நடத்தப்படுகின்றன.
வேலூருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த அமைதிப்பிரதேசத்திற்கு வருகை தருவது சிறந்தது.