வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரத்தில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.
வள்ளிமலைக்கோயில் முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் தலத்தில் மஹாவிஷ்ணுவின் இரண்டு புத்திரிகளான வள்ளியும் தேவயானையும் சாத்வீக குணம் கொண்ட கணவர்களை அடைய விரும்பி துதித்ததாகவும் இறுதியில் இருவரும் முருகப்பெருமான மீதே காதல் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், புராதன காலத்தில் இம்மலைப்பகுதியில் ஜைனம் தழைத்திருந்ததும் தெரிய வருகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன.
இயற்கை அழகு, குகைகள், அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள் மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது.
சுப்ரமணிய சுவாமி கோயில், சரவணப்பொய்கை கோயில மற்றும் வள்ளி கோயில் என மொத்தம் மூன்று கோயில்கள் வள்ளிமலைப்பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.