வேலூர் மாவட்டத்திலுள்ள விளப்பாகம் ஒரு நகரப்பஞ்சாயத்து ஆகும். இங்கு வசிக்கும் மக்கள் 68 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது சராசரி தேசிய எழுத்தறிவு விகிதாசாரத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு பகுதிக்கு தெற்கே வேலூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த விளப்பாக்கம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலை பஞ்சபாண்டவ மலை என்று அழைக்கப்படுகிறது.
புராதன காலத்தில் இந்த பகுதியில் ஜைன மார்க்கம் தழைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. விளப்பாக்கத்தில் உள்ள ஒரு பாறைக்குடைவு கோயில் இதற்கான சான்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஜைன மார்க்கத்துக்குரிய கடவுளர் உருவங்கள் மற்றும் சித்தரிப்புகள் பாறைப்பொறிப்புகளாக காணப்படுகின்றன.