நேரமிருந்தால் வேணூருக்கு வரும் பயணிகள் பஹுபாலி சிலைக்கு மேற்கில் அமைந்துள்ள அக்கங்கல பஸாதிக்கும் விஜயம் செய்வது நல்லது. அக்கங்களா பஸாதி அல்லது எட பஸாதி என்றழைக்கப்படும் இது திம்மண்ணா அஜிலா மன்னரின் இரண்டு மனைவிகளான மல்லி தேவி மற்றும் பாண்டியக்க தேவியால் 1604ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. சருகீர்த்தி ஸ்வாமியின் ஆசிர்வாதத்துடன் திம்மண்ணாவின் ராணிகள் இந்த பஸாதியை கட்டியுள்ளனர்.