விதிஷாவில் உள்ள ஜெய்ராஸ்பூர் ஒரு பழமையான கோயில். இது ஹிண்டோலா டொர்னா என்ற கலையுடன் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளது. ஹிண்டோலா என்பது ஊஞ்சலையும் டொர்னா என்பது தலைவாயிலையும் குறிகின்றது.
ஆனால் இங்கு ஊஞ்சலை காட்டும் விதமாக எதுவும் இல்லை. ஊஞ்சலின் அமைப்பை ஒத்த பெரிய தூண்கள் இங்குள்ளதால் இப்பெயர் பெற்றிருக்கக்கூடும். இந்த ஹிண்டோலா டொர்னா தற்பொழுது கோவிலின் நுழைவாயிலாக விளங்குகிறது.
நுழைவு வாயிலில் அலங்காரத்துடன் கூடிய தூளம் ஒன்று இரண்டு தூண்களும் சேரும் இடத்தில் உள்ளது. தூண்களின் ஓரங்களில் தசாவதாரம் செதுக்கப்பட்டுள்ளதை காணமுடியும். புத்தர் காலத்து சூரிய ஜன்னல் ஒன்றையும் இங்கு காணலாம். கட்டிடக்கலையில் இந்து மற்றும் புத்த கலைகளின் சங்கமத்தை இங்கு காண முடியும்.