விஜயவாடா நகரத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களில் இந்த சுப்ரமண்யஸ்வாமி கோயிலும் ஒன்றாகும். இது கிருஷ்ணா நதியை நோக்கியவாறு வீற்றிருக்கும் இந்திரகீலாத்ரி மலையில் உள்ளது.
கந்த சஷ்டி திருவிழா இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஏராளமான முருக பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். பாரம்பரியமாக இட்டிபில்லி எனும் குடும்பம் இந்த சுப்ரமண்யஸ்வாமி கோயிலை பராமரித்து நிர்வகித்து வருகிறது.