ராமேஷ்வர் மஹாதேவ் கோயில், விந்தியாஞ்சலில் உள்ள ராம் கயா படித்துறையில், விந்தியவாசினி தேவி கோயிலிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலும், மிர்சாப்பூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ராமபிரான் தன் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சிவனை வேண்டி நிகழ்த்திய சிரார்த்த பூஜையின் காரணமாகவே இக்கோயில் இப்பெயரை பெற்றுள்ளது.
ராமபிரான் தன் குருவான வசிஷ்டரின் வழிகாட்டுதலின் பெயரிலேயே இப்பூஜையை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. மேலும் ராமபிரான் தன் மூதாதையர்களின் நினைவாக ஒரு சிவலிங்கத்தையும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
விந்தியவாசினி தேவி மற்றும் அஷ்டபுஜா தேவி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இரு கோயில்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இக்கோயில். இம்மூன்று கோயில்களும் முக்கோண வடிவில் அமைந்து மஹாதிரிகோணம் என்ற பொதுப்பெயரில் வழங்கப்படுகின்றன.
திரிலோக பரிக்ரமா என்ற சடங்கின் பகுதியாக இம்மூன்று கோயில்களையும் சுற்றி பிரதட்சணம் செய்வதை பக்தர்கள் மங்களகரமான ஒரு செய்கையாகக் கருதுகின்றனர்.
இங்கு உலவும் நாட்டுப்புற கதைகளின் படி, ராமபிரான் தன் மூதாதையர்களின் சிரார்த்த பூஜையை நிறைவு செய்த பின் இக்கோயிலுக்கு வந்து விந்தியவாசினி தேவியை வழிபட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ராமபிரானின் உதாரணத்தை பின்பற்றி, அவரது தம்பியான லக்ஷ்மணும் லக்ஷ்மணேஷ்வர் மஹாதேவ் என்ற கோயிலை இதற்கு அருகிலேயே அமைத்துள்ளார்.