சீதா குந்த் என்றழைக்கப்படும் நீரூற்று, விந்தியாஞ்சலில் உள்ள மங்கர் என்ற இடத்தில் உள்ள வித்யா குந்த் மற்றும் மணி பர்வத் ஆகியவற்றிற்கு அருகில், ஒரு சிறு மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது.
இந்த நீரூற்று ராமாயண காலத்தைச் சேர்ந்ததாகும். ராமன், சீதை மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் இலங்கையில் நடந்த போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய போது, சீதைக்கு தாகம் எடுத்தது.
அருகாமையில் தண்ணீர் தென்படாததால், லக்ஷ்மண் ஒரு அம்பை பூமியை நோக்கி எய்தார். அப்போது அவ்விடத்தில் இருந்து ஒரு நீரூற்று பொங்கிப் பிரவகித்தது.
சீதா குந்த் ஒரு வற்றாத நீரூற்றாகும். இது சீதையோடு தொடர்புடையது, ஆதலால் இது உள்ளூர் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியமான ஒரு வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
பிரம்மாண்டமான மலைகளை பின்புறத்தில் கொண்டுள்ள இந்த நீரூற்று, புனித நீர் சேகரிக்க இங்கு வரும் பக்தர்களால் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படுகின்றது. இந்த நீரூற்றை அடைய வேண்டுமெனில், செங்குத்தாகச் செல்லக்கூடிய 48 படிகளில் ஏற வேண்டும்.
இதன் அருகில் உள்ள ஒரு மலை மேல் ஹனுமான், ராம் ஜானகி மற்றும் துர்க்கா தேவி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இதர மூன்று கோயில்களும் அமையப்பெற்றுள்ளன.
சௌராசி பரிகர்மா, ஷ்ரவன் மற்றும் ராமநவமி போன்ற வைபவங்களின் போது அதிக அளவிலான பக்தர்கள் இக்கோயிலை முற்றுகையிடுகின்றனர்.