விந்தியவாசினி ஜயந்தி சமாரோ என்ற திருவிழா விந்தியாஞ்சலின் காவல் தெய்வமாக விளங்கும் விந்தியவாசினியின் பிறந்த தினத்தை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியின் சமூக, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்காகவும் நடத்தப்படுகிறது.
உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திருவிழா, உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது வெளியே இருந்து இங்கே வருவோரையும் கவரக்கூடியதாகத் திகழ்கிறது.
இத்திருவிழா, கந்தித் நரேஷ் என்ற மன்னரின் மகளாகிய கஜாலியை நினைவுகூர்வதாகவும் உள்ளது. இந்த இளவரசி தான் மிக விரும்பிய தன் கணவரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவள் தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை தன் கணவரின் நினைவில் பாடல்கள் பாடி கழித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த விழா நாடெங்கிலுமிருந்து பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர்களையும், நாட்டுப்புறப் பாடகர்களையும் ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது.
இக்கலைஞர்கள் விந்தியவாசினி தேவியைப் போற்றும் பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மிகப் பெரும் பார்வையாளர் கூட்டத்திலிருந்து உற்சாகமான பலத்த கரகோஷத்தை அதற்கான அங்கீகாரமாகப் பெறுவர்.
மேலும், பேகம் அக்தர் மற்றும் இதர பாரம்பரிய இசைக்கலைஞர்களால் பிரபலமாக்கப்பட்ட கஜ்ரி இசை வடிவம் இப்பகுதியில் தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.