விராட் நகரில் அமைந்திருக்கும் பீம் கி துங்கரி, புராண கதைகளின் பின்னணியால் புகழ் பெற்று விளங்கும் மிகப்பரிய குகையாகும். அதாவது மகாபாரதத்தில் கூறியிருப்பது போல கௌரவர்களிடம் யாவற்றையும் இழந்த பாண்டவர்கள் 13 வருட வன வாசமும், 1 வருட அஞ்ஞான வாசமும் அனுபவிக்க வேண்டும் என்று நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு 13 வருட வன வாசத்தை அனுபவித்த பாண்டவர்கள், கடைசியாக 1 வருட அஞ்ஞான வாசத்தை விராட் நகரில்தான் கழித்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு வருட அஞ்ஞான வாசத்தில் பீமன் மட்டும் இந்த குகையில் இருந்து கொண்டு விராட் நகர் அரண்மனையின் தலைமை சமையல்காரனாக பணியாற்றி வந்ததாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.