விராட் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக ஜெயின் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்த கோயிலின் நுழைவாயிலுள்ள தூண்கள் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அலாதியானது.
அதோடு இந்த கோயிலில் சுற்றியும் சுவர்கள் அமையப்பெற்று காட்சியளிக்கும் திறந்த முற்றம் ஒன்றும் இருக்கிறது. மேலும் கோயில் வளாகத்தின் தெற்குச் சுவற்றில் 40 வரிசைகளில் கல்வெட்டுகள் சிலவும் காணப்படுகின்றன.
ஜெயின் கோயிலில் மூன்று ஜைன தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் பர்ஸ்வநாத்தின் உருவம் கல்லிலும், சந்திரபிரபாவின் உருவம் செம்பிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு காணப்படும் மூன்றாவது சிலை ஜைன மதத்தின் 24 தீர்தங்கர்களில் முதலாமவராக கருதப்படும் ரிஷபதேவாவின் உருவம் ஆகும்.