கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் கோபியர் சேலைகளை திருடியதாகவும், மற்றும் ராதையுடன் தனது ராசலீலைகளை நிகழ்த்தியதாகவும், தெய்வீக நடனங்கள் புரிந்ததாகவும், பல அசுரர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே 5000 கோயில்களுடன் புராணிக முக்கியத்துவம் கொண்ட இந்த நகரம் ஒரு பெரிய யாத்திரை நகரமாக ஸ்தலமாக திகழ்வதில் வியப்புமொன்றுமில்லை.
வரலாற்றுக்காலத்தில் தனது மேன்மை குன்றி காணப்பட்ட இந்த நகரத்தை 1515ம் ஆண்டில் சைதன்ய மஹாபிரபு கண்டுபிடித்துள்ளார். கிருஷ்ணரோடு தொடர்புடைய எல்லா தலங்களையும் கண்டறியும் பயணத்தின்போது இந்த இடத்தை அவர் அடைந்துள்ளார்.
மேலும் விருந்தாவனத்தின் காடுகளில் அலைந்து திரிந்த அவர் தனது ஞானதிருஷ்டியால் பல முக்கிய இடங்களை கண்டுபிடித்திருக்கிறார். அந்த நாள் தொடங்கி இன்று வரை இந்த விருந்தாவன் ஹிந்து ஆன்மிக யாத்ரீகர்கள் விரும்பி விஜயம் செய்யும் இடமாக இருந்து வருகிறது.
ராதே கிருஷ்ணா எனும் வார்த்தைகளை உச்சரித்தபடியே இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட கடமைகளில் ஈடுபட்டிருப்பதை பயணிகள் நேரில் பார்க்கலாம்.
விருந்தாவன் நகரம் மற்றும் சுற்றிலும் காணப்படும் சுற்றுலா அம்சங்கள்
முன்னரே குறிப்பிட்டுள்ளதுபோல் விருந்தாவன் நகரம் 5000 கோயில்களை கொண்ட யாத்திரைத்தலமாக புகழ் பெற்றிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை மிகப்புராதனமான கோயில்களாகும்.
மேலும் பல கோயில்கள் முகலாயர் காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஔரங்கசீப் மன்னரால் பல கோயில்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இன்றும் நிலைத்திருக்கும் கோயில்கள் கிருஷ்ணரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட கதைகளை பிண்ணனியில் கொண்டுள்ளன. பங்கே பிஹாரி கோயில், ரங்க்ஜி கோயில், கோவிந்த் தேவ் கோயில் மற்றும் மதன் மோகன் கோயில் போன்றவையும் இங்கு அமைந்துள்ள இதர முக்கியமான கோயில்களாகும்.
இஸ்க்கான் கோயில் இங்கு மிகச்சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கோயிலாக அமைந்திருக்கிறது. இது அமைதியை தேடி வரும் வெளிநாட்டு பக்தர்களை அதிக அளவில் ஈர்க்கிறது. வேதப்பயிற்சி மற்றும் ஷீமத் பகவத் கீதை வகுப்புகள் போன்றவை இங்கு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இங்குள்ள ராதா கோகுல்நந்தா கோயில் மற்றும் ஷீ ராதா ராஸ் பிஹாரி அஷ்ட சகி கோயில் போன்றவை ராதைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகக்கோயில்களாகும். அஷ்ட சகி என்பது ராதையின் எட்டு தோழிகளை குறிப்பிடுகிறது. கண்ணன் மற்றும் ராதைக்கிடையே நிகழ்ந்த சிருங்கார விளையாட்டுகளில் இவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கோயில்கள் மட்டுமல்லாது, இங்குள்ள கேசி காட் எனும் நீராட்டுத்துறை யாத்ரீகர்களின் விருப்பத்தலமாக அமைந்திருக்கிறது. இந்து நம்பிக்கைகளின்படி யமுனை நதியில் உள்ள இந்த படித்துறையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் யாவும் தீரும் என்பதாக கூறப்படுகிறது.பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜை ஆரத்தி போன்றவை இந்த படித்துறையில் நடத்தப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள்
விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற மூவழி போக்குவரத்து வசதிகள் மூலம் சுலபமாக விருந்தாவன் நகருக்கு விஜயம் செய்யலாம்.
சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்
நவம்பர் முதல் மார்ச் வரை உள்ள பருவமே விருந்தாவன் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.