விருந்தாவன் நகரத்தில் உள்ள கோயில்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த ராதா ராமன் கோயில்1542ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. பக்தர்களால் விரும்பி பூஜிக்கப்படும் புனிதமான கோயிலாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
அக்காலத்திய இந்திய கோயிற்கலை பாணியில் விரிவான கலையம்சங்கள் நிறைந்ததாக இந்த கோயில் காட்சியளிக்கிறது. கோபால பட்டா கோஸ்வாமி என்பவரின் வேண்டுகோள்படி கட்டப்பட்ட இந்த கோயிலின் கட்டுமானம் முடிவதற்கு பல ஆண்டுகள் பிடித்துள்ளன. காலப்போக்கில் பல்வேறு புதுப்பிப்புகளையும் மாற்றங்களையும் இந்த கோயில் கண்டு வந்துள்ளது.