வான்கனேரில் உள்ள ரஞ்சித் விலாஸ் அரண்மனை கலை, கட்டடக்கலை மற்றும் பொறியியல் துறையில் வான்கனேரின் அரச குடும்பத்தினரின் நாட்டத்தை பிரதிபலிக்கும். 1907-ஆம் ஆண்டு அமர்சிங்ஜி மகாராஜாவால் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, பல கட்டடக் கலையின் கலவையாக கட்டப்பட்டது.
மெயில் மீது இருக்கும் இந்த அரண்மனையில் இருந்து பார்த்தால் வான்கனேர் நகரம் அழகாக காட்சி அளிக்கும். இந்த அரண்மனையில் அழகிய கோதிக் வளைவுகள், முகாலய குவிமாட வடிவில் கடிகார கோபுரம், பிரான்கோ-இத்தாலிய ஜன்னல் கம்பிகள், அழகிய மேல் மாடங்கள் போன்றவைகளை காணலாம்.
இந்த அரண்மனையில் இன்னும் ராஜ வம்சத்தினர் வாழ்ந்தாலும், அரண்மனையின் ஒரு பகுதி அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே தலைசிறந்த படைப்புகள், கலைப்பொருட்கள் மற்றும் அணிகலன்கள் போன்றவைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.