வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது.
1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம்...
பத்மாக்ஷி கோயில் எனும் இந்த புராதனக்கோயில் 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இது பத்மாக்ஷி தேவி எனும் பெண் தெய்வத்துக்காக கட்டப்பட்டுள்ளது. ஆன்மீக முக்கியத்துவத்துடன் கட்டிடக்கலை அம்சங்களும் சேர்ந்து காணப்படும் முக்கிய கோயிலாக இது பிரசித்தி பெற்று...
ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது.
1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000...
கோவிந்த ராஜுல குட்டா என்றழைக்கப்படும் இந்த ஸ்தலம் ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக வாரங்கல் நகரில் பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு மலையுச்சியில் ஒரு ராமர் கோயில் உள்ளது.
ராமபிரானின் தீவிர பக்தர் ஒருவரின் பெயரால் இந்த திருத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரத்தில் ஒரு...
வாரங்கல் நகருக்கு அருகிலேயே உள்ள பக்கல் சரணாலயத்தில் இந்த பக்கால் ஏரி அமைந்துள்ளது. இது மனித முயற்சியில் உருவான செயற்கை ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான 30 கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய இந்த ஏரி 1213ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரின்...
வாரங்கல் கோட்டைக்கு அருகிலேயே இந்த ராக் கார்டன் எனப்படும் பாறைப்பூங்கா அமைந்துள்ளது. இது ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது. புள்ளிமான், வரிக்குதிரை, சிங்கல், கொம்புமான் போன்ற விலங்குகளின் பாறை வடிவமைப்புகள் இந்த பாறைப்பூங்காவில் அமைக்கப்பட்டு நன்கு...
பத்ரகாளிக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயில்களில் மிகப்பழமையான கோயிலாக இந்த வாரங்கல் பத்ரகாளி கோயில் புகழ் பெற்றுள்ளது. சாளுக்கிய வம்ச மன்னரான இரண்டாம் புலிகேசியால் 625ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது பத்ரகாளி ஏரியின் கரையிலேயே...
வாரங்கல் பிளானெட்டேரியம் அல்லது பிரதாபருத்ரா பிளானட்டேரியம் என்றழைக்கப்படும் இந்த கோளரங்கம் வாரங்கல் நகரிலுள்ள முக்கிய அறிவியல் மையமாக பிரசித்தி பெற்றுள்ளது.
வானியல் குறித்த விழிப்புணர்ச்சியை மக்கள் மற்றும் இளந்தலைமுறையினர் மத்தியில் உருவாக்கும்...