பத்ரகாளிக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயில்களில் மிகப்பழமையான கோயிலாக இந்த வாரங்கல் பத்ரகாளி கோயில் புகழ் பெற்றுள்ளது. சாளுக்கிய வம்ச மன்னரான இரண்டாம் புலிகேசியால் 625ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது பத்ரகாளி ஏரியின் கரையிலேயே அமைந்துள்ளது. ஹிந்து புராணிக ஐதீகங்களின்படி அன்னையின் வடிவாக கருதப்படும் இந்த தெய்வம் எட்டு கரங்களில் ஆயுதந்தரித்த கோலத்தில் இந்த கோயிலில் காட்சியளிக்கிறது.
அலாவுதீன் கில்ஜி படையெடுப்புக்கு பின்பு இந்த கோயில் பாழடைந்த நிலையை அடைந்தாலும் பிற்காலத்தில் 20ம் நூற்றாண்டி மத்தியில் இது புனரமைப்பு செய்யப்பட்டது. தற்சமயம் சாளுக்கிய கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றாக நிலைத்து இந்த கோயில் வீற்றிருக்கிறது.
கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இயற்கையாக உருவாகியுள்ள பல பாறை அமைப்புகளும் காணப்படுகின்றன. வித்தியாசமான இயற்கை காட்சியை அளிக்கும் இவை பயணிகளை வெகுவாக கவர்கின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் இந்த பாறையமைப்புகளை ரசிப்பது ஒரு ஒப்பற்ற அனுபவமாகும்.