கோபுரி கிராமத்தில் விஷ்வ சாந்தி ஸ்தூபிக்கு அருகில் இந்த கீதை மந்திர் அமைந்துள்ளது. வார்தாவில் மிகவும் புகழ்பெற்ற சிறப்பம்சமாக கருதப்படும் இந்த கோயில் 1980ம் ஆண்டு ஆச்சார்ய வினோபா பாவே’வால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஒரு வித்தியாசமான கட்டிடக்கலை வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் பொறிக்கப்பட்ட இந்த கற்கள் குறுக்காக அடுக்கப்பட்டு ஒரு பசுவின் உருவத்தைப்போன்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில் குறித்த மற்றொரு சிறப்பான தனித்தன்மை என்னவெனில் இங்கு எந்த ஒரு விக்கிரகமும் இல்லை, மேற்கூரையுமில்லை என்பதாகும்.
கோயிலுக்கு அருகாமையிலேயே ஒரு அழகிய சிறிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள சாந்தி குடியில் ஜம்னாலால் பஜாஜ், ஆச்சார்யா வினோபா பாவே மற்றும் மஹாத்மா காந்தி ஆகியோரின் வாழ்க்கை குறித்த கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.