இந்த ‘மகன் சங்க்ரஹாலயா மியூசியம்’ என்று அழைக்கப்படும் அருங்காட்சியகம் வார்தா பகுதியிலுள்ள மகன்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது மஹாத்மா காந்தி அவர்களால் 1938ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் திறக்கப்பட்டுள்ளது. காந்திய பொருளாதார மேதைகளான ஆர்யநாயகம் மற்றும் டாக்டர் ஜெ.சி.குமரப்பா ஆகிய இருவரால் இந்த அருங்காட்சியகம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமிய தொழில்கள், பால் பண்ணைகள், விவசாயம் போன்றவை குறித்த அறிவை பரப்புவதற்கான நோக்குடனும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுடனும் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கிராம கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட காதி, சர்க்கா மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஸ்வதேசி இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.