பாணாசுர சாகர் அணை கல்பெட்டா நகரிலிருந்து 21 கி.மீ தூரத்தில், கபினி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. பாணாசுர சாகர் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக 1979ம் ஆண்டில் துவங்கப்பட்டு இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த இப்பகுதியின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பெரிய ‘கரைத்தடுப்பு அணை’ எனும் பெயரைப் பெற்றுள்ள பாணாசுர சாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ‘கரைத்தடுப்பு அணை’ எனும் பெருமையையும் பெற்றுள்ளது. கற்கள் மற்றும் தூண்களை பயன்படுத்தி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட போது இப்பகுதியில் பள்ளமாக இருந்த பகுதிகள் நீர்த்தேக்கத்தில் மூழ்கி சிறு சிறு தீவுத்திட்டுகள் போன்ற அமைப்புகள் உருவாகியுள்ளன. பாணாசுர மலைகளிலிருந்து பார்க்கும்போது இந்த தீவுத்திட்டுகள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மலையேற்றத்தில் ஈடுபட விரும்பும் சாகசப்பயணிகள் இந்த அணைப்பகுதியிலிருந்துதான் தங்கள் பயணத்தை துவங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மட்டுமன்றி வெளிநாட்டு பயணிகள் மத்தியிலும் இந்த பாணாசுர சாகர் அணை ஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது.