குருவா டிவீப் எனும் இந்த அழகிய ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. வயநாட் பகுதியின் முக்கிய ஆறாக இந்த கபினி ஓடுகிறது.
குருவா டிவீப் என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுத் தீவுத்திட்டு செழிப்பான பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்று காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏராளமான தாவர இனங்களும் காட்டுயிர் அம்சங்களும் வசிக்கின்றன.
பல அரிய வகைப்பறவைகளும் இந்த குருவா தீவுத்திட்டினை இருப்பிடமாக கொண்டுள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட விசேஷமான மூலிகைச்செடிகள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் போன்றவற்றை இங்கு பயணிகள் காணலாம்.
இயற்கையின் செழிப்பை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் ரசனை உள்ளம் படைத்தவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கும் அளவுக்கு இந்த தீவுத்திட்டின் இயற்கை வளம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
கேரள சுற்றுலாத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபைபர் படகுகள் அல்லது மிதவைகள் மூலம் இந்த தீவுத்திட்டுக்கு பயணிகள் செல்லலாம். இயற்கை அழகு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடத்தின் சில பருவங்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் இந்த தீவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே தீவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுச்செல்வது அவசியம்.