சிவாலிக் மலைகளின் எல்லைக்கடைசியில், 880கிமீ பரப்பளவில் உள்ள வால்மிகி தேசியப் பூங்கா புலிகள் போன்ற பல அரிய வகை உயிரினங்களைக் கொண்டுள்ளது.
பச்சைப் புல்வெளிகாள் சூழ்ந்த இந்த பூங்காவில் சிட்டல்ஸ், ப்ளாக் பக்ஸ், ஃபிஷிங் பூனைகள், வேங்கைகள் ஆகிய வனவிலங்குகளும்...
பஞ்சானந்த், சோனாஹா, கண்டக் ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் இங்கு நடைபெறுவதால் திரிவேணிக் கரை என இந்த இடம் அழைக்கப்படுகிறது. மக சங்கராந்தி விழாவின் போது இங்கு பெருமளவில் மக்கள் குவிந்து புனித நீராடுகிறார்கள். இந்திய நேபாள எல்லையில் இருக்கும் இந்தக் கரை மிகவும் அழகு...
2300 வருட பழமையான இந்த தூண்கள் 35அடி உயரம் உள்ளன. மவுர்ய பேரரசின் பெருமைகளை பறைசாற்றும் வண்ணம் இவை பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன.
இவ்விடத்தில் 52கோட்டைகளின் மிச்சங்கள் உள்ளன என்பதால் 52கோட்டைகள் என பொருள்படும் வண்ணத்தில் ட்ரிபான் பஜார் என்றும் இவ்விடம் அழைக்கப்படுகிறது. 52கோட்டைகள் மற்றும் 53பஜார்களின் மிச்சங்கள் இந்த இடத்தில் இருந்து வடக்கே இருப்பதை காணலாம்.
பனிபடர்ந்த இமயமலைகளின் அழகை, குறிப்பாக அன்னப்பூர்ணா சிகரத்தின் அழகை கண்முன் கொட்டும் பிகாநோத்ரியில் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் வேட்டைக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
சுமேஷ்வர் மலைகளில் உள்ள இக்கோட்டை நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கூர்மையான மலைமுகட்டில் நிற்கும் இந்தக் கோட்டையின் சிதைவுகளை இப்போது காணலாம். தெளலகிரி, கோசைந்தான் மற்றும் கவுரிஷங்கர் ஆகிய இமயமலை சிகரங்களை இங்கிருந்து காணலாம்.
அனைத்திந்திய காந்து சேவா சங்கத்தின் ஆண்டு விழா 1937ல் இங்கு நடந்தபோது மகாத்மா காந்து, ராஜேந்திர பிரசாத், க்ரிபலானி ஆகொயோர் பங்கேற்றிருக்கிறார்கள். காந்தியால் உருவாக்கப்பட்ட பள்ளி ஒன்றும் இங்கு நடத்தப்படுகிறது.
அழகிய எழிலார்ந்த ஏரியான சரையா மான் பெட்டியா நகரில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ளது. சரையா மான் பல புலம்பெயர் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது.
பிதிஹரவா ஆசிரமம் இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றியுள்ளது. காந்தியடிகள் இங்கிருந்தே தனது சம்பரன் சத்தியாகிரகத்தை துவக்கினார்.
நந்தன்கார்ஹ் லெளரியா சதுக்கத்திலும், சங்கிகார்ஹ் நர்கடியாகாஞ் சதுக்கத்திலும் உள்ளன. நந்தா மற்றும் சாணக்கிய வம்ச காலத்து மணற்முகடுகள் இவைகள்.