நகரத்திலிருந்து 30 கி.மி தூரத்தில் ரங்கபணி எனும் இடத்தில் இந்த ரொம்பா கிரே எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஓடும் சிம்சங் ஆற்றில் உருவாகியுள்ள குளத்தை உள்ளூர் மக்கள் நன்கு பாதுகாத்து வருகின்றனர். ஸ்படிகத்தூய்மையுடன் ஜொலிக்கும் சுத்தமான நீரால் நிரம்பியுள்ள இந்த குளத்தில் பலவகை மீன்கள் வசிக்கின்றன.
கண்ணாடி போன்ற நீரில் மீன்கள் நீந்தி விளையாடும் காட்சியை பார்த்து ரசிப்பதற்கென்றே இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அது மட்டுமல்லாமல் ரொம்பா கிரே கிராமத்தை சுற்றி இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் நிரம்பியுள்ளன. மக்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இங்கு விஜயம் செய்து பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக அமைதி மற்றும் தனிமையான இடமாக காட்சியளிக்கும் சுற்றுலாத்தலம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப்பிறப்பு போன்ற கொண்டாட்டங்களின்போது பிக்னிக் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.
வில்லியம்நகர்-துரா சாலையில் இந்த ரொம்பா கிரே கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் டாக்சி அல்லது சுற்றுலா வாகனத்தின் மூலம் இங்கு வரலாம்.