மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் இந்த துரா நகரம் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் துரா சிகரத்தின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மலையில் வசிப்பதாக கருதப்படும் துராமா எனும் தெய்வத்தின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்தபின் துரா என்பது டுரா என்று ஆயிற்று.
இந்த அழகிய நகரம் முழுதும் சிற்றோடைகளும் பள்ளத்தாக்குகளும் நிரம்பியுள்ளன. இந்த நகரத்தில் தங்கியவாறு பயணிகள் கரோ மலைப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களான பல்பக்ராம், நோக்ரெக் மற்றும் சிஜு குகை போன்றவற்றுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.
அழகிய நீர்வீழ்ச்சிகள் இங்கு அதிகம் காணப்படுவதால் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் இந்த நகரத்துக்கு வருகை தருகின்றனர். உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் ஞாபகார்த்தப்பொருட்கள் வாங்குவதற்கும் இது மிகவும் ஏற்ற இடம்.