வோக்கா நகரின் மையப்பகுதியில், மக்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய வண்ணம் அமைந்துள்ள தண்ணீர் குளமான எட்ஸுச்சுக்கா, தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு இடமாகும்.
இக்குளம் நகரின் அழகுக்கு மெருகூட்டுவதோடல்லாமல், இப்பகுதியில் வாழும் மக்களின் முக்கிய நீராதாரமாகவும் திகழ்கிறது. வோக்காவில் தம் அதிகார மையத்தை நிறுவிய ஆங்கிலேயர்கள், முதன் முதலாக இக்குளத்தில் இருந்து நீர் இறைத்த காலத்திலிருந்தே இது பெரும் புகழ் பெற்று விளங்குகிறது.
வோக்கா வரும் சுற்றுலாப் பயணி எவரும், பசுமை நிறைந்த சுற்றுப்புறத்தைக் கொண்டு மனதை வசீகரிக்கும் எட்ஸுச்சுக்காவைச் சுற்றி ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளுமாறு சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
வில்லைப் போல் வளைந்த வடிவில் உள்ள இந்த ஏரியைச் சுற்றிலும் காணப்படும், இவ்விடத்தின் தனித்தன்மையோடு கூடிய பல அரிய வகைத் தோட்டங்கள், இக்குளத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன.
சூரியன் தகிக்கும் ஒரு நாளில் இந்த முழு ஏரியும் ஜொலிக்கும் அழகை புகைப்படம் எடுத்து, நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பெருமை பொங்கக் காட்டலாம்.