யமுநோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3235 மீ உயரத்தில் இமயமலையின் கார்வல் பகுதிக்கு மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் இந்து சமய தேவதையான யமுனா மற்றும் கடவுளான யமா ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தேவதை யமுனாவின் சகோதரர் யமா கடவுளாவார்.
யமோத்ரி ஆலயம் 19 ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் மகாராணி குலேரியா அவர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் வாசல்கள் புனித நாளான அக்சய திரியை அன்று திறக்கப்படும்.
அந்த நாள் இந்து சமய வைசாக மாதத்தில் மூன்றாவது நிலா நாளில் வருகிறது. அதாவது தீபாளிக்கு இரண்டாவது நாள் வருகிறது. யமுனா நதியின் பெயரிலிருந்தே யமுநோத்ரி என்ற பெயரும் வருகிறது.
யமுனா நதி யமுனோத்ரிக்கு அருகில் இருந்து புறப்பட்டு பாய்கிறது. யமுநோத்ரியில் இருக்கும் சுர்யா குண்ட் மற்றும் கௌவுரி குண்ட் ஆகிய சூடான நீரூற்றுகளும் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன.