காஷ்மீரில் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். குளிரை விரும்புவரகளுக்கு ஏற்ற இடமாக அமையும்! ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா மேம்பாட்டினை, குறிப்பாக குளிர்காலத்தில் மேம்படுத்த, ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா துறையானது புதிய பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறது. அதனை தான் நாம் பள்ளத்தாக்கு வாரவிடுமுறை என அழைக்கிறோம்.
இந்த நிகழ்வில் விளையாட்டுக்களும், பொழுதுப்போக்கு செயல்களும் குளிர்காலத்தில் காணப்படுகிறது. விளையாட்டுடன் மீன் பிடித்தல், சைக்கிள் ஓட்டுதல், மாரத்தான்கள், பனி செருப்பு ஓட்டம் என பலவும் காணப்படுகிறது. மற்ற செயல்களாக, ஜம்மு & காஷ்மீரின் நாட்டுப்புற இசை, திரையரங்க நிகழ்ச்சிகள், ராக் இசை கச்சேரி என பலவும் காணப்படுகிறது.
இத்தகைய செயல்களின் சேர்ப்பாக, உணவு லாரிகளும், ஜம்மு & காஷ்மீர் பாரம்பரிய வண்டியுமெனவும் காணப்படுகிறது. இந்த முயற்சியினால் சுற்றுலாவானது மேம்பட, உலகம் முழுவதுலிமிருந்து நேர்மறை எண்ணங்களும் பல காணப்படுகிறது. இந்த நிகழ்வானது வார விடுமுறையில் அரங்கேற, குளிர்காலத்தின் விளிம்பு வரை காணப்படவும்கூடும்.
பஹல்காம் கோடைக்காலத்து இலக்காக சுற்றுலா பயணிகளுக்கு அமைய, இந்த சுற்றுலா துறையானது குளிர்க்கால இடத்தை மேம்படுத்துவதோடு, பனி சறுக்கையும் கொண்டிருக்கிறது. (காஷ்மீரின் புது பதிவுகளின் படி)
இந்த மதிமயக்கும் இந்திய மாநிலத்தை நாம் பார்த்து வியப்படைய, ஜம்மு & காஷ்மீரில் ஒரு சில விளையாட்டு தனமான விஷயங்களும் மூழ்கி காணப்படுகிறது.
தால் ஏரியின் சிகாராவில் ஒரு பயணம்:
ஸ்ரீநகரில் மிளிரும் தால் ஏரி, சுற்றுலா செல்ல முயலும் இடங்களுள் ஒன்றாக இருக்க, ஒரு வித சிறப்பான நீர் சவாரிக்கு வீடாக விளங்க, சிகாரா என இதனை அழைக்கப்படுகிறது. மகிழ்ச்சியை தரும் தால் ஏரி வழியாக சிகாராவிற்கு நாம் செல்ல, மாபெரும் பனி மூடிய மலைப்பகுதியும் நகரம் முழுவதும் சூழ்ந்திருப்பதை காண்கிறோம்.
நம்மால் இங்கே மிதக்கும் மலர்களையும், காய்கறி சந்தையையும் காண முடிய, இது விடியல் பொழுதிலும் வாழ தொடங்கிட, அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிகாராவின் இந்த சவாரியை தவிர, படகுவீட்டையும் நாம் வாடகைக்கு எடுக்க, சில நாட்கள் அழகிய தால் ஏரியிலும் வாழ்ந்திடலாம்.
PC: Unknown
முடிவில்லா சாகச செயல்கள்:
நெகிழவைக்கும் நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஜம்மு & காஷ்மீர், முடிவில்லா சாகச செயல்களையும் மூழ்கிய வண்ணம் காணப்பட, சாகச விரும்பிகளின் சிறப்பான வெளியேற்றமாகவும் இது அமையக்கூடும்.
பஹல்காம்மின் லிட்டெர் நதியானது நம்மை வெள்ளை நிற நதி சவாரிக்கு அழைத்திட, சாய்வுகளில் பனி சூழ்ந்த குல்மார்க் மலையுமென பனி சறுக்கு சாகசம் செய்யவும் நம்மை அழைக்கிறது. மலையில் பைக் பயணம், ட்ரெக்கிங்க், மலை ஏறுதல், என பெயர் சொல்லும் பலவும் சாகசங்களின் பொக்கிஷமாக லடாக்கில் பெயர் பெற்று விளங்குகிறது.
PC: Basharat Shah
தனித்துவமிக்க காஷ்மீரி உணவின் மீது குருட்டுத்தனமான சுவை பற்று:
ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தனித்துவமிக்க, வித்தியாசமான உணவு வகையை கொண்டிருக்க, அதனை நாம் தவிர்த்திடாமல் முயல்வதும் அவசியமாக அமைய, குறிப்பாக உணவு விரும்பிகளின் விருப்பமாகவும் இது இருக்கிறது. ஒரு சில புகழ்மிக்க உணவுகளான காஷ்மீரி உணவுகளை நாம் முயற்சி செய்ய, அவை பன்னீர் சாமன், காஷ்மீரி மட்டன் யாக்னி, மட்ச்காண்ட் மற்றும் காஷ்மீரி கவா (தேனீர்) என பல உணவுகளாகவும் அமைகிறது.
PC: Kamaljith K V
அழகிய புத்த மடாலயத்திற்கு ஒரு பயணம்:
இந்தியாவில் காணும் ஒருசில முக்கியமான மற்றும் மாபெரும் மடாலயங்கள் கொண்ட இடங்களுள் ஒன்றாக ஜம்மு & காஷ்மீரும் இருக்கிறது. இந்த மடாலயமானது வழக்கமாக அழகிய புத்த சிலையை வடித்திருக்க அதன் விளக்கங்களும் காணப்பட, இந்த மடாலயங்களின் ஒரு அங்கமாக சுவர்களும் அல்லது தங்காக்கள் அல்லது புத்த ஓவியங்களும் இருக்க, பட்டு, பருத்தி அல்லது மற்ற பிற ஆடைகளாலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரில் நாம் காண வேண்டிய மற்ற சில அழகிய மடாலயங்களாக பாஸ்கோ மடாலயம், திஸ்கித் மடாலயம், ஹெமிஸ் மடாலயம், ஆல்சி மடாலயம் என பெயர் சொல்லும் பலவும் அடங்கும்.
கண்கொள்ளாகாட்சி தரும் இடங்கள்:
நமக்கு தெரிந்த ஜம்மு & காஷ்மீர், நாம் ஆராய்ந்திட வேண்டிய நிலுவையில் இருக்கும் மாநிலமாக அமைகிறது. 2 அல்லது 3 வார பயணமாக இதனை நாம் திட்டமிட்டு காஷ்மீரை நோக்கி செல்ல, தலை சிறந்த இடங்களான ஸ்ரீநகர், லடாக், குல்மார்க், உதம்பூர், சோன்மார்க் என பலவற்றையும் காணலாம். பனி சண்டை போட ஏதுவாக இந்த இடம் அமைய, பாண்டிக்கான பயணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் வழியாகவும் நாம் செல்ல, இந்த அழகிய மாநிலத்தின் இடங்களையும் மனதார ரசித்திடலாம்.
PC: Madhav Pai