ராமனுக் கும் ராவணனுக்கும் இடை யில் நடக்கும் கதைகளை ராம காவியம் என்கிறார் கள். இதில் ராமனுக்கு துணை யாக லட்சுமணன் முதலிய சகோதரர் களும், சீதையும் என நிறைய பேர் இருக்கி ன்றனர். ராவண னுக்கும் துணையாக அவரது சகோதர சகோதரிகள் நண்பர்கள் இருக்கின்றனர். இதில் அண்ண னிடம் கொண்ட அன்பால் லட்சுமணன் எந்த எல்லைக் கும் போகத் தயாராக இருந்ததும், தான் என்ன சொன்னா லும் செய்வான் என தம்பி யிடம் அவ்வளவு பாசமாக இருந்ததும் அண்ணன் தம்பி பாசத்தை பறை சாற்றுவதாக உள்ளது. இப்படி இருக்கை யில் லட்சுமணன் இறப்பதற்கு ராமன் எப்படி காரணமா கினார் என்பது சற்று குழப்பும் அல்லவா. லட்சுமணன் எங்கு தனது உயிரை விட்டார் என்ற இடம் தெரிந்தால் அதுவும் ஆச்சர்ய மாக இருக்கும். ராமன் லட்சும ணன் சாவுக்கு காரணமாக இருந்த தும், லட்சுமணன் உயிர் விட்ட இடத்தின் பத்து ஆச்சர்ய மான விசயங்களை யும் இந்த பதிவில் காண லாம் வாருங்கள். அதுக்கு முன்னாடி மறக் காம மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணி சப்ஸ் கிரைப் பண்ணி டுங்க. வாங்க அந்த இடத்து க்கு போகலாம்.
சரயு நதி
சரயு நதியில் தற் கொலை செய்து கொண்ட லட்சும ணன், தன் அண்ணனு க்காக தியாகம் செய் வதாக நினைத்து, அண் ணன் தம்பி பாசத் துக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்தார். அப்படி லட்சுமணன் இறந்த இடம் தற்போது புண்ணிய பூமியாக நினைத்து வழிபடப் படுகிறது. இந்த சரயு நதி தோன்றி மறை யும் இடத் தைச் சுற்றி யிருக்கும் அனை த்து சிறப்பு களை யும் இந்த பதிவில் விரி வாகக் காண விருக்கி றோம்.
சரயு நதி இந்தியா வில் இந்த பெயரால் அழைக்கப்பட்டா லும், இது ஹரிருத் எனும் நதி யிலிருந்து பிரிந்த இந்திய கிளைதான்.
ஆப்கானிஸ் தான் ஈரான் துர்க்மேனிஸ் தான் என அயல் நாட்டு கிளை களை யும் கொண்டு ள்ளது இந்த ஹரிருத் ஆறு.
இந்தியாவில் பாரைச் மாவட்ட த்தில் இரண்டு நதிகள் கலந்து சரயு நதியாக உருவெடுக்கிறது.
அவை
1. கர் னால் எனப் படும் காக் காரா நதி
2. மகா காளி எனப் படும் ஷர் தா நதி
மகாகாளி நதி நேபாளத்தின் இந்திய எல்லையில் உருவாகிறது. இந்த நதி புண்ணிய நதியாக போற்றப்படுவது அயோத்தி நகரத்தை அடையும்போதுதான். ஆம் அயோத்தியில்தான் லட்சுமணன் இந்த நதியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
A. J. T. Johnsingh,
அயோத்தியில் சரயு நதி
ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோர் சரயு நதி கடந்து சென்றார்கள் எனும் தொடர் ராமாயணத்தில் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்தது அயோத்தியில் என்பதாலும், சரயு நதியைக் கடந்து சென்றனர் என்று இருப்பதாலும் இந்த நதி அவ்வளவு புனிதமாக பார்க்கப்படுகிறது.
ராமாயண காவியம் ஒரு கதை மட்டுமல்ல, அது பல்வேறு நபர்களால் பலவாறு எழுதப் பட்ட பல கதைகள். எனினும் பெரும்பாலான ராம காவியங்களில் அயோத்யா நகருக்கு இணையாக சரயு நதி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சரயு நதியைக் கடந்தே மற்ற இடங்களுக்கு செல்லமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
PP Yoonus
தசரதன் தவறுதலாக அம்பெய்திக் கொன்ற ஷ்ரவனகுமார்
தசரத மன்னர் ஒரு முறை சரயு நதியைக் கடந்து வேட்டையாடச் சென்றபோது, மானைக் குறிவைக்க, அதில் சிக்கி பலியானவன் ஷ்ரவனகுமார். கண்தெரியாத தன் பெற்றோர்களுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றபோது தசரதனின் அம்பு மார்பை கிழித்து இறந்தான். இவன் ஊரும் உத்தரபிரதேசத்தில் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தசரதனின் அம்பு ஷ்ரவன் நெஞ்சை கிழித்த இடம் சர்வாரா, அவன் தன் பெற்றோ ரோடு வாழ்ந்த இடம் சமதா. இந்த இரு கிராமங் களும் மிகவும் சிறப்பு வாய்ந்த தாக இந்த பகுதியில் பார்க்கப் படுகிறது.
Vishwaroop2006
உத்தரகண்ட்டின் குமாவோன்
உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் மாவட்டத்தில் வீறுகொண்டு பாயும் சரயு நதியின் ஆதிமூலம் சர்மோல் நதி ஆகும்.
இது முடிவுடையும் இடம் பஞ்சேஸ்வர். இதன் அருகாமையில் பசுமை நிறைந்த மலைகளை அமைந்துள்ளது. இங்கு ஆன்மீகத் தளங்களும் அமைந்துள்ளன.
Ramwik
பாகேஸ்வர்
பாகேஸ்வர் எனும் இடம் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சரயு நதி கோமதி எனும் நதியுடன் இணைகிறது. இது மிகவும் புனித மான இடமாக பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் அருகிலேயே பாக்நாத் கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
Chawlaharmeet
பாகேஸ்வர் சுற்றுலாத் தளங்கள்
மிகவும் பசுமையான, குளிரான குறைந்த அளவே வீடுகள் கொண்ட அழகான ஒரு சுற்றுலாப் பிரதேசம் இதுவாகும்,. இதன் அழகில் தங்களை மறக்காதவர்கள் என யாரும் இருக்கமுடியாது. அவர்கள் அனைவரையும் இங்கு அழைத்து வந்து குதூகலிக்கச் செய்யலாம். புகைப்படங்கள் எடுக்கலாம். கொண்டாடலாம். புது வருசத்தை வரவேற்க சிறந்த தலம் இது. மேலும் இங்கு கிறிஸ்துமஸ் முதலான விழாக்களுக்கு சிறப்பாக இருக்கும்.
pramod nagher
பாக்நாத் கோயில்
பாகேஸ்வர் நகரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்களின் பிரபலமான கோயில் ஆகும். இங்கு விழாக்காலங்களில் அதிக அளவு கூட்டம் வருகை தரும். அப்போது சிறப்பான கொண்டாட்டங்களும் நிகழ்த்தப்படும். சிவ ராத்திரி நேரங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும்.
ArmouredCyborg
மார்க்கண்டேய முனி
முனிவர் மார்க்கண்டேயர் இந்த நதியில் மூழ்கி குளித்து இங்குள்ள சிவ பெருமானை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது அதற்கு முன்னதாகவே கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் நம்பிக்கை. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு பூசைகள் நடத்தப்படுகின்றன.
ArmouredCyborg
திருவிழாக்கள்
மகர சங்கராந்தி அதாவது நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை இங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மதம் சார்ந்த பண்டிகை இல்லை என்றாலுமே, இங்கு வாழும் இந்துக்கள் மிகவும் சிறப்பாக இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இங்குள்ள சரயு நதியில் நீராடி, சிவபெருமானை வணங்கிவிட்டு, அவருக்கு செய்யப்படும் பூசைகளை பார்த்துவிட்டு திரும்பும்போது மனம் அமைதி பெறுவதாக நம்புகின்றனர் பக்தர்கள்.
Bharat Chandola
சரயு நதியில் சுற்றுலா
சரயு நதியை அடைவதற்கு நீங்கள் அயோத்திக்கு செல்வதே சிறப்பு. எனினும் சரயு நதியைத் தேடி யாரும் பயணிக்கப்போவதில்லை. அயோத்தி செல்லும்போதோ, பித்தோர்கர்க் செல்லும்போது அருகிலுள்ள சரயு நதியையும் கண்டுகொண்டு திரும்புங்கள். ஏனெனில் அது ராமபிரான் சிறுவதில் தன் சகோதரர்களுடன் ஆடிப் பாடி மகிழ்ந்த நதி....