குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. குருவின் பார்வை எத்தகைய தோஷமாக இருந்தாலும் அதை விலக்கும் என்பது ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட குருவின் பார்வை தங்கள் ராசியின் மீது விழாதா என்பது பலரின் ஏக்கம். இந்நிலையில் அடுத்த குரு பெயர்ச்சி வந்துவிட்டது. இது குறிப்பிட்ட ஒரு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி விதைக்கப் போகிறது. அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை தரும் குரு பகவான், கோடியாய் குவிக்கப் போகிறார். இதில் சில ராசிகளுக்கு பரிகாரம் தேவைப்பட்டாலும் ஒரே ஒரு ராசி மட்டும் உச்சத்தினை தொடப் போகிறது. அது எந்த ராசி, அவர்கள் என்ன செய்ய வேண்டும், தோஷங்கள் விலக எந்தத் தலத்திற்குச் செல்ல வேண்டும் என பார்க்கலாம் வாங்க.
குரு பகவான்
மனிதர்களை நல்வழிபடுத்துவதில் குரு பகவானுக்கு நிகராக யாரும் இல்லை என்பது கூற்று. இதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்கின்றனர். பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரே பிருகஸ்பதி என்னும் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம்.
குரு பெயர்ச்சி
குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒருவருட காலம் கொள்கிறார். அவர் எந்த ராசியில் குடிகொண்டுள்ளாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே ஜோதிடத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அஇந்த காலகட்டத்தில் குரு பகவான் நம்மைப் பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.
பலனடையும் இராசிகள்
குரு பகவான் அடுத்த அக்டோபர் மாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். அப்போது, அவர் சென்று அமரும் ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார். சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் முதலே நல்ல பலன்களை அளிக்கிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதில், ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிகளுமே செழிப்பான பலன்களை பெறவுள்ளன.
உச்சகட்ட பலன்
இந்த குருப் பெயர்ச்சியின் போது மிதுனம் ராசிக்காரர்களுக்கு 6-வது வீட்டில் குரு அமர்கிறார். எனவே, குரு பகவானின் பார்வை விழும் 2-ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு இடமாகும். 10ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும். இப்பெயர்ச்சி காலத்திலேயே தொழிலில் முன்னேற்றம், வாகன யோகம், புது வீடுகள் கட்டும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன.
மிதுன ராசி
குருபகவான் தனது 5ம் பார்வையால் மிதுன ராசியின் 10ம் வீட்டைப் காண்பதால் இடையில் நின்ற வேலைகல் மீண்டும் புதுப் பொழிவுடன் துவங்ப்படும். புதிய வேலையும், செய்யும் வேலையில் முன்னேற்றமும் உண்டாகும்.
பரிகார ராசிகள்
இந்த ஆண்டில் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்கிறார். இதனால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வர சுப காரியங்கள் அரங்கேறும். குறிப்பாக, குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் மாலையும் சாற்றி வழிபட நன்மை உண்டாகும்.
பரிகாரத் தலங்கள்
குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், குருவித்துறை ஆகியவை விளங்குகின்றன. குருப்பெயர்ச்சி காலத்தில் இத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் ராசியிலும், குர பார்வையிலும் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கி குருப் பெயர்ச்சிக்கான முழுப் பயன்களையும் அடையலாம்.
குருவித்துறை குரு
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ள குருவித் துறை பகுதியானது அயன் குருவித்துறை மற்றும் கோயில் பகுதி குருவித்துறை என இரு பகுதிகளாக திகழ்கிறது. இதில், கோயில் குருவித் துறை பகுதியில் அமைந்துள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் திருத்தலம். குரு பகவானின் பிரச்சனையைத் தீர்த்தருளி அவருக்குப் பிரத்தியேகமாகக் காட்சி தந்து அருளிய பெருமாள் இவர். இதனால், இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோவிலும் உள்ளது.
விசித்திரத் திருத்தலம்
சிவா தலங்களில் குரு பகவானுக்கு சன்னதி இருப்பது பொதுவான ஒன்று தான். ஆனால், வைணவத் தலமான பெருமாள் கோவிலில் குருபகவான் வீற்றிருப்பது சற்று விசித்திரமாக உள்ளது. தேவலோகத்தில் இருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்ததால் இத்தலம் குரு வீற்றிருந்த துறை என அறியப்படுகிறது.
kuruvithuraigurubhagavantemple
எப்படிச் செல்வது ?
மதுரையில் இருந்து கல்லுப்பட்டி- மரவபட்டி நெடுஞ்சாலையில் இருந்து ஸ்ரீநகர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து சோழவந்தானைக் கடந்தால் குருவித்துறையில் அமைந்துள்ளது அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோவில். வைகைக் கரையோரம் அமைந்துள்ள இத்தலத்தை சென்றடைய மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. வாடிப்பட்டி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
திருவலிதாயம்
சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும்.
குருவுக்கே தோஷம்
குரு பகவான் தனக்கு ஏற்பட்டிருந்த தோஷத்தில் இருந்து விடுபட இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு என தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது.
பாரத்வாஜ தீர்த்தம்
வியாழன் தான் செய்த தவறால் தன் தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழபட்டால் பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என அறிவுருத்தினார். அதன்படியே இத்தலத்தில் உள்ள பாரத்வாஜ புனித தீர்த்தத்தில் வியாழன் நீராடி சிவபெருமானை வணங்கி விமோட்சனம் அடைந்தார்.
எப்படிச் செல்வது ?
சென்னை மாநகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவலிதாயம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் பயணிக்கிரீர்கள் என்றால் அயனாவரம் சாலையில் நியூ ஆவடி சாலையை அடைந்து பாடி பகுதியில் உள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். உள்ளூர் வாடகைக் கார்கள் மூலம் இத்தலத்தை அடைவது எளிமையாக இருக்கும்.
தென்திட்டை குரு
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார்.
பஞ்சலிங்க தலம்
திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலம் பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது தல சிறப்பாக உள்ளது. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக வீற்றுள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாக விளங்கும் இத்தலத்தில் குருப் பெயர்ச்சி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
குரு பகவான்
திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்தில் மூலவருக்கும், அம்பாளுக்கும் இடையே ராஜகுருவாக எழுந்தருளி குரு பகவான் அருள்பாலிக்கிறார். இவருக்கு இத்தலத்தில் வருடந்தோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார பிராத்தனையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எப்படிச் செல்வது ?
தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் ஆலயம். தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு பிரியும் சாலையில் பயணிக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இத்தலத்திற்கு உள்ளது.
கோவிந்தவாடி குரு தலம்
தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது குரு கோவில் என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் திருத்தலம். இங்கு மூலவராக வீற்றுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தோஷம் நீங்கி, குரு பலம் கூடும் என்பது நம்பிக்கை. மேலும், தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுதான்.
குருவாக காட்சிதந்த சிவன்
இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி அளித்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசம் செய்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனை வணங்கி பாடல்கள் பாடி வழிபட்ட தலம் இது என்பதால் கோவிந்தபாடி என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்படுகிறது.
எப்படிச் செல்வது ?
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் புதுவாக்கம் அடுத்துள்ளது அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில். அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் கோவிந்தவாடியை அடைந்து விடலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூருக்கு தினந்தோறும் ரயில் சேவை உள்ளது.