ராணா பிருத்வி சிங் மன்னரால் 18ம் நூற்றாண்டில் இந்த அர்கீ அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது இந்த அரண்மனையின் ‘அர்கி கலம்’ எனப்படும் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள் காணப்படுகின்றன.
தற்போது அழிந்து வரும் நிலையில் காட்சியளித்தாலும், புராணங்கள், நாட்டுப்புற கதைகள், காளிதாசரின் குமாரசம்பவம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளின் ஓவியங்களை இந்த அரண்மனையில் பார்க்கலாம்.
தற்போது ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ள இந்த அரண்மனையானது இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களை பார்த்து ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பாகல் ராஜவம்ச காலத்திற்குரிய எண்ணற்ற சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்றவற்றையும் இங்கு பார்க்கலாம்.