நீங்கள் பெங்களூர் வாசியாக இருந்தால், உங்களுடைய வார இறுதி நாட்களை குதூகலமாக கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கண்டிப்பாக இருக்கும்.
உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பயணிகளை ஈர்க்கும் பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதிளின் கீழ் வரும் பன்னேர்கட்டா பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அனிக்கள் தொகுதியின் பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும் இது இருந்து வருகிறது.
1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.
பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா ஒன்று.
இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து புலி, சிங்கங்களோடு நீங்கள் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.
பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவை ஒட்டி நீல வாக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணமுகி ஓடை பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கக் கூடியது. இந்த ஓடை புகழ் பெற்ற விஷ்ணு கோயிலான சம்ப்பக தாம சுவாமி ஆலயம் அமைந்திருக்கும் ஸ்வர்ணமுகி குன்றிலிருந்து உற்பத்தியாகிறது.