சட்டீஸ்கரின் இரண்டாவது பெரியநகரமான பிலாஸ்பூர், அதிகமான மக்கள் தொகை கொண்ட சட்டீஸ்கர் நகரங்களில் மூன்றாவதாகவும் திகழ்கிறது. இந்தியாவின் மிக அதிகமான மின் உற்பத்தி மையமாக திகழும் பிலாஸ்பூர், ரயில்வேதுறையிலும் மிக அதிகமான வருமானம் ஈட்டுகிறது. சட்டீஸ்கரின் உயர்நீதிமன்றமும் இங்கு உள்ளது. பிலாய், கோர்பா, ராய்கார்ஹ் ஆகிய நகரங்களுடன் பிலாஸ்பூரிலும் எஃகு தொழிற்சாலை சிறந்து விளங்குகிறது.
பிலாஸ்பூர் மாம்பழங்கள், சமோசாக்கள், புடவைகளும் புகழ்பெற்ற விளங்குகின்றன. பகேலி, பாரியா ஆகியவை முக்கியமான மொழிகளாகும். ராவத் நாச் மஹோத்சாவ் என்பது இங்கு கொண்டாடப்படும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியாகும்.
பிலாசா என்ற 17ஆம் நூற்றாண்டு மீனவப்பெண்களைக் குறிக்கும் வார்த்தைகளில் இருந்து பிலாஸ்பூர் என்ற பெயர் தோன்றியிருக்கிறது. மீனவர்களின் கோட்டையாகத் திகழ்ந்து இந்நகரம் பின் மராட்டியர்களால் பிடிக்கப்பட்டு, பிறகு ஆங்கிலேயர்கள் கையில் மாறியது,
பிலாஸ்பூர் சுற்றுலாத் தலங்கள்
தொல்பொருள் இடங்களும், கோவில்களும் இங்கு ஏராளமாக உள்ளன. அசனாக்மர் வனவுயிர் சரணாலயம் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சுற்றுலா இடமாக இருக்கிறது.
ஹஸ்தேவ் பங்கோ அணை, மல்ஹார் மற்றும் ரதன்பூர் தொல்பொருள் மையங்கள், தலாகிராம் எனப்படும் தியோரானி-ஜெதானி கோவில், பபிள் ஐலாண்ட் எனப்படும் கேளிக்கை பூங்கா என இங்கு ஏராளமான சுற்றுலாதளங்கள் இருக்கின்றன.
பெரிய குளம் ஒன்றும், சமாதி ஒன்றும் பெல்பான் என்ற இடத்தில் உள்ளது. குடாகட் என்ற இயற்கை காட்சி நிரம்பிய இடமும், துறவிகள் நிறைந்த கபீர் சோபுதாரா என்ற இடங்களும் கூட புகழ்பெற்று விளங்குகின்றன. ஆப்ரா நதிக்கரையில் உள்ள இந்த மாவட்டத்தில் சொன்முடா என்ற மற்றொரு மலை சார்ந்த சுற்றுலா தளமும் உள்ளது.
பயணிக்க சிறந்த பருவம்
மழைசார்ந்த, உலகலாவிய வானிலையே இங்கு நிலவுகிறது. கோடையில் அதிக வெப்பவும், குளிர்காலம் மிதமாகவும் இருக்கிறது.