பிஷ்ணுபூரில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் செம்புரைக்கற்கள் மற்றும் செங்கலால் கட்டப்பட்ட டெரகோட்டா கோவில்கள் தான் இங்குள்ள பிரதான சுற்றுலா தலங்களாகும். டெரகோட்டா பயன்பாடு இதனோடு நிற்காமால், மண்பாண்ட பொருட்கள், நகை வகைகள் மற்றும் அருங்கலைப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பிஷ்ணுபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
பிஷ்ணுபூரில் பல புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. அதில் டல்மடல் காமன், நுடன் மஹால் போன்றவைகள் சில. ஸ்ரீனிபாஸ் ஆச்சார்யா பிறந்த இடமும் இதுவே.
திருவிழாக்களும், பண்பாடுகளும்!
இங்கு நடக்கும் துர்கா பூஜையையும் காளி பூஜையையும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்நேரத்தில் நகரம் முழுவதும் வண்ணமயமாக ஜொலிக்கும். இதனோடு கண்கவரும் வானவேடிக்கையும் நடைபெறும்.
கூடவே திருவிழா விருந்தும் அமர்க்களப்படும். பிஷ்ணுபூரில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் மாதமும் பாம்பு திருவிழா எனும் இன்னொரு திருவிழாவும் நடைபெறும்.
பளுச்சாரி புடவைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது இந்த நகரம். திருவிழா நேரத்தின் போது இந்த புடவைகள் மலிவு விலையில் விற்கப்படும். அந்நேரத்தில் நீங்கள் தேவையான புடவைகளை வாங்கி குவிக்கலாம். இந்த புடவைகளில் மகாபாரத கதைகள் நெய்யப்பட்டிருப்பதையும் காணலாம்.
பிஷ்ணுபூரை அடைவது எப்படி?
பிஷ்ணுபூர் நகரம் மேற்கு வங்காளத்தின் மையத்தில் உள்ளது. இங்கு சாலை, இரயில் மற்றும் விமானம் வழியாக சுலபமாக வந்தடையலாம்.