சில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய கடற்கரைக்காயலாக உள்ளதால் இந்த ஏரிக்கு இது கூடுதல் பெருமையை சேர்கிறது. ஒடிசாவில் உள்ள இந்த கடற்கரைக்காயல் மிகவும் புகழ் பெற்ற தலமாக விளங்குவதால் சுற்றுலாப் பயணிகளிடம் இது மிகப்பெரிய ஈர்ப்பாக உள்ளது. தலைநகரமான புபனேஷ்வரிலிருந்து 81 கி.மீ. தொலைவில் உள்ள சில்கா, கஞ்சம் மாவட்டம், குர்தா மற்றும் பூரிக்கு ஆகிய இடங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
வரலாற்றின் மீது ஒரு பார்வை!
ப்ளீஸ்டோசென் காலத்தில், சில்கா வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக விளங்கியது என்று நிலப்பொதியியல் அளவீடு உறுதி செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கலிங்கர்கள் ஆட்சி காலத்தில் சில்கா ஒரு சுறுசுறுப்பான வணிக மையமாகவும் முதன்மையான துறைமுகமாகவும் விளங்கியது. சில்கா ஒரு முக்கியமான துறைமுகம் என்று டோலெமி என்ற கிரேக்க-ரோமானிய எழுத்தாளர் தன் படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சில்கா மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
சில்கா சுற்றுலாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உலக புகழ் பெற்ற சில்கா ஏரி. இதை தவிர இங்கே படகு சவாரி, பீன் பிடித்தல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு களித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடலாம்.
சில்கா - இயற்கையின் இசைவு!
சில்காவில் காணப்படும் பலதரப்பட்ட பறவைகள், நீர் வாழ் விலங்குகள் மற்றும் ஊர்ந்து செல்கின்ற விலங்குகள் அதன் சுற்றுலாவின் வளமையை எடுத்துரைக்கும். ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தின் போது ஆயிரக்கணக்கான பறவைகள் சில்கா ஏரிக்கு இடம் பெயரும்.
இந்த ஏரியில் நீர் வாழ் விலங்குகளான மீன்கள், ஆமைகள், நண்டுகள், இறால்கள் மற்றும் நத்தைகள் வாழ்கின்றன. பல்லி வகையை சேர்ந்த ஸ்கின்க் மற்றும் இராவடி டால்பின்களையும் இங்கே காணலாம்.
சில்காவிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த காலம்
சில்காவிற்கு குளிர் காலத்தில், அதாவது அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவதே சிறந்த நேரமாகும். இக்காலத்தில் இடம் பெயர்கின்ற பல பறவைகளுக்கு இந்த இடம் புகலிடமாக அமையும்.
அதனால் இக்காலத்தில் இங்கு வந்தால் இப்பறவைகளை கண்டு களிக்கலாம். மேலும் வானிலையும் குளிர்ச்சியாக இருக்கும். பகல் நேரத்தில் கூட வானிலை இனிமையாக இருக்கும்.
சில்காவை அடைவது எப்படி?
சில்காவை விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். சில்காவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் புவனேஷ்வரில் உள்ளது.
ரம்பா மற்றும் பளுகோன் தான் இதற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையங்களாகும். பூரி மற்றும் கட்டாக்கிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாகவும் சில்காவிற்கு வரலாம்.