கூர்க் வரும் பயணிகள் நேரம் இருந்தால் வீரபூமி என்ற சுற்றுலா கிராமத்துக்கும் செல்லலாம். கர்நாடகாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் செயல்பட்டுகொண்டிருக்கும் ஓரே பாரம்பரிய உல்லாச நகரம் இதுதான்.
இதன் விடுதிகள் போர்க்களம் போன்று வடிவமைக்கப்பட்டும், உணவு பரிமாறுபவர்கள் படைவீரர்களை போன்று உடை உடுத்தியும் இருப்பது பயணிகளுக்கு கற்காலத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை தரும்.
அதோடு இங்கு நடக்கும் பொழுபோக்கு நிகழ்ச்சிகளும், மாலை வேளைகளில் ஒலிபரப்பப்படும் சுகமான பாடல்களும் பயணிகளுக்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இங்கு பச்சை பசேல் என்று காணப்படும் செடிகொடிகளுக்கும், குன்றுகளுக்கும் இடையில் நீந்தி, பயணிகள் பொழுதை இன்பமயமாக களிக்கலாம்.