கட்டாக்கில் உள்ள இந்த மைதானம் ஒடிசா விளையாட்டு வீரர்களுக்கு புகழிடமாக திகழ்கிறது. ஒடிசா கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இது இந்தியாவின் பழங்கால மைதானங்களில் ஒன்றாகும்.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா என பல வெளிநாட்டு அணிகளும் இங்கு விளையாடியுள்ளன. பிரம்மாண்ட மின்னொளி வசதி உள்ள இங்கு பகலிரவு ஆட்டங்களும் நடத்தப்படுகின்றன.
கபில்தேவ் இங்குதான் தனது 300வது விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாது திலீப் வெங்சார்க்கர் இங்கு 166ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தினார்.