தரம்கர்ரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஜுனகர். இங்குள்ள பழமையான கோவில்களால் இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த இடத்தில் ஒரு காலத்தில் "சதி" என்ற உடன்கட்டை ஏறும் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியதற்கான ஆதாரங்கள் இந்த கோவில்களில் கண்டெடுத்த பல ஒரியா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரின் கடவுளாக பார்க்கப்பட்ட லங்கேஷ்வரி தேவிக்காக புகழ் பெற்ற லங்கேஷ்வரி கோவில் ஒன்று இங்கே உள்ளது. இந்த கடவுளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் இங்கே 'கண்டபாசா' என்ற திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
தாதி பாமன், பைரவ குடி மற்றும் கனக துர்கா ஆகியவைகள் இங்கே காணப்படும் மற்ற முக்கிய கோவில்களாகும். ஜுனகர் முழுவதும் துர்கா பூஜையும் விநாயகர் சதுர்த்தியும் பக்தர்களின் வெள்ளத்தில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
ஜோஜ்னா நதிக்கு மேல் கம்பீரமான ஜோஜ்னா அணை உள்ளது. பாறைகள் நிறைந்த மலைகளை பின்புலமாக கொண்டுள்ளதால் இந்த அணையை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மேலும் பல்மாஜ்ஹரன் என்ற சிரியா நீர்வீழ்ச்சி ஒன்றும் இங்குள்ளது. பசுமையான காட்டிற்கு நடுவில் அமைந்துள்ளதால் உள்ளூர்வாசிகளும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு விரும்பி வருவதுண்டு.



Click it and Unblock the Notifications