தரம்கர்ரிலிருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள முக்ஹிகுடா என்ற கிராமம் சில இயற்கை அழகு மிக்க இடங்களை கொண்டுள்ளது. இங்கு தான் புகழ் பெற்ற இந்திராவதி அணை உள்ளது.
இந்திராவதி நதியின் மேல் அமைந்துள்ள இந்த கம்பீரமான அணை இந்தியாவின் இரண்டாவது பெரிய மின் நிலையமாகும். இந்த அணையை சுற்றி பசுமையான விவசாய நிலங்களை காணலாம்.
துவாமல்-ராம்பூரிலிருந்து உதயமாகும் இந்த நதி பசுமையான அடர்ந்த காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக சென்று கட்டிகுடாவில் போய் நிற்கும். பசுமையான காடுகளுக்கு மத்தியில் இந்திராவதியின் தூய்மையான நீல நிற நீருக்கு மத்தியில் இந்த அணை சுற்றுலாப் பயணிகளை பெரிதளவில் ஈர்க்கிறது.
இந்த நீர்த்தேக்கத்தில் படகு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. படகு மூலம் இயற்கை எழிலை கண்டு களிக்க இங்கு பல சுற்றுலாப் பயணிகளை வருவதுண்டு. இதனருகில் தல்குத் ஷக்தி பித் என்ற பழமையான கோவில் ஒன்றும் உள்ளது.
இது முக்ஹிகுடாவில் உள்ள பழமையான கோவிலாக கருதப்படுகிறது. தரம்கர் வருபவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலை காண தவற விடக்கூடாது.



Click it and Unblock the Notifications