தேசிய நெடுஞ்சாலை 37, திப்ருகாரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றது. அழகிய இயற்கைக் காட்சிகள் சூழச் செல்லும் சாலை வழிப் பயணம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். குவாஹத்தியிலிருந்து திப்ருகார் செல்லும் வாடிக்கையான பேருந்துகள் பல உள்ளன. கோஹிமாவிலிருந்து திப்ருகார் செல்லும் தினப்படி பேருந்துகள் பலவும் உள்ளன. திப்ருகார் வழித்தடம், அருணாச்சலப்பிரதேசம் செல்வதற்கான நுழைவு வாயிலாகவும் திகழ்கிறது.