கௌகாத்தியின் முக்கியமான புனிதத்தலங்களில் ஒன்றாக வசிஷ்டா ஆசிரமம் உள்ளது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜா ராஜேஸ்வர் என்ற அஹோம் அரசரால் இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டது.
இந்த ஆசிரமம் சந்தியா, காந்தா மற்றும் லலிதா என்ற மூன்று நீரோடைகள் சந்திக்கும் இடத்தில் சதாய்சால் மலைகளில் அமைந்துள்ளது.
இந்த ஆசிரமத்தைக் கடந்து செல்லும் தண்ணீர் மூழ்கி எழுவதன் மூலம் குளிப்பவருடைய பாவங்கள் கரைந்து, ஆயள் கூடும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த ஆசிரமம் பிரபலமான துறவியான வசிஷ்டருடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.
இவருடைய அருளால் தான் தைட்டிய அரக்கியாக இருந்த ஒரு பெண்ணின் குழந்தை, அஹோம் இனத்தவராக இருந்து பல நூற்றாண்டுகளுக்கு இந்த பகுதியை ஆட்சி செய்தார் என்றும் நம்பப்படுகிறது.
வசிஷ்ட ஆசிரமத்திற்கு ஒரு முறை வருவது உங்களுக்கு நினைவு கூறத்தக்க அனுபவமாக இருக்கும். இந்த பகுதியின் நிலம் அழகாகவும், சுத்தமாகவும் மற்றும் நீரோடைகளின் சங்கமத்தை காண வாய்ப்பளிக்கும் வகையிலும் உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஒரு சுற்றுலா வாகனத்திலோ அல்லது சிறப்பு பேருந்திலோ இந்த ஆசிரமத்திற்கு வந்து செல்லலாம்.



Click it and Unblock the Notifications