வருடம் முழுதும் மிதமான வானிலையே நிலவுகிறது. குறைந்த அளவே பணம் வாங்கும் நல்ல தங்குமிடங்களும் இங்கு உண்டு. அக்டோபரில் இருந்து ஏப்ரல் வரையிலான மாதங்கள் இங்கு குடும்பத்தோடு சுற்றுலா வர உகந்த நேரமாக கருதப்படுகிறது.
மார்ச் முதல் மே வரை நீளும் கோடைகாலத்தில் வானிலை 23ல் இருந்து 35டிகிரி வரை மாறுபடுகிறது. மாலை வேளைகளில் தென்றல் வீசுவதால் குடும்பத்துடன் இந்த பருவத்தில் கடற்கரையில் உலாவுவது சிறப்பான அனுபவமாகும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த பருவத்தில் பயணிப்பது உகந்ததல்ல.
டிசம்பரில் துவங்கி ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை 16டிகிரியில் இருந்து 27டிகிரி வரை நீள்கிறது. மிதமான வானிலையில் கடலை ரசிப்பது மிகவும் அழகான அனுபவமாகும்.