ஜெய்ப்பூர் நகரின் பிரபலமான நினைவுச்சின்னமாக திகழும் இந்த ஹவா மஹால் ஒரு கவிஞராகவும் விளங்கிய சவாய் பிரதாப் சிங்மஹாராஜாவால் 1799ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்த ஐந்து அடுக்கு மாளிகை ஜோஹரி பஜாருக்கு அருகில்...
ஆம்பேர் கோட்டையானது ராஜ மான் சிங், மிர்ஸா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது.
மூத்தா எனும்...
நாகர்கர் கோட்டை ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. 1734ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டையின் உயர்ந்த சுவர்கள் மற்றும் காவல் கோபுரங்கள் 1880ம் ஆண்டில் மஹாராஜா சவாய் மதோ சிங் அவர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆரவல்லி...
ஜல் மஹால் எனும் இந்த அழகிய அரண்மனை ஜெய்ப்பூரில் ஒரு சிறிய ஏரியின் நடுவே அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் மன்னர்கள் மற்றும் ராஜகுடும்பத்தினர் வேட்டைக்கு செல்லும்போது தங்கும் வசிப்பிடமாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏரிக்கரையிலிருந்து இந்த அரண்மனையை பார்த்து...
ஷீஸ் மஹால் எனும் இந்த அற்புத மாளிகை ஆம்பேர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இது கண்ணாடிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜெய் மந்திர் எனப்படும் மாளிகையின் ஒரு அங்கமான இந்த ஷீஸ் மஹால் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கூரை மற்றும் சுவர்களில்...
ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் இந்த வானியல் நோக்குக்கூடம் மற்றும் ஆராய்ச்சிக்கூடம் மஹாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வானியல் ஆராய்ச்சி வளாகம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது...
அக்ஷர்தாம் கோயில் ஜெய்பூர் நகரில் உள்ள பிரபல்யமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். வைஷாலி நகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோயில் அதன் அற்புதமான வடிவமைப்பு, உன்னதமான சிலைகள், சிற்பங்கள் மற்றும் அலங்கார வடிப்புகள் ஆகியவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஹிந்து...
ஆல்பெர்ட் ஹால் சவாய் ராம் சிங் மஹாராஜாவால் 1886ம் ஆண்டு 4லட்ச ரூபாய் மதிப்பீடு கொண்ட பஞ்ச நிவாரணத் திட்டங்களின் ஒரு அங்கமாக கட்டப்பட்டதாகும். இது ஜெய்ப்பூரிலுள்ள அழகான பூங்காத்தோட்டங்களில் ஒன்றான ராம் நிவாஸ் பாக் எனப்படும் தோட்டத்தினுள் அமைந்துள்ளது.
சர்...
ஹிந்துக்கடவுள் கிருஷ்ணருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவிந்த் தேவ்ஜி கோயில் ஜெய் நிவாஸ் தோட்டப்பூங்காவில் அமைந்துள்ளது. முன்னதாக பிருந்தாவன் கோயிலில் இருந்த கோயில் விக்கிரகத்தை மஹாராஜா இரண்டாம் ஜெய் சிங் இந்த கோவிந்த் தேவ்ஜி கோயிலில் தங்கள் குடும்ப தெய்வமாக...
ஜெய்கர் கோட்டை அல்லது வெற்றிக்கோட்டை என்றழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கழுகுமலை என்றழைக்கப்படும் மலையின் உச்சியில் ஆம்பேர் கோட்டையிலிருந்து 400 அடி உயரத்தில் இந்த ஜெய்கர் கோட்டை...
ராம் நிவாஸ் பாக் எனப்படும் இந்த வனப்பு மிகுந்த பூங்காத்தோட்டம் 19ம் நூற்றாண்டில் ராம் சிங் மஹாராஜாவால் நிறைவேற்றப்பட்ட பஞ்ச நிவாரணத்திட்டங்களில் ஒரு அங்கமாகும்.
இந்த பெரிய பூங்காவில் ஒரு விளையாட்டு வளாகம் மற்றும் விலங்குக்காட்சிசாலை ஆகியவற்றுடன் ஒரு தாவர...
‘சன்வார் பால்கி வாலன் கி ஹவேலி’ எனும் பழமையான ஹவேலி மாளிகையின் உள்ளே இந்த அனோகி மியூசியம் அமைந்துள்ளது. இது கையச்சு மற்றும் கைவண்ணக்கலைக்கான மையமாகும்.
ஜெய்ப்பூரின் பாரம்பரியக்கலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு அறக்கட்டளையின் மூலம் இது...
ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த ‘சிஸோடியா ராணி கா பாக்’ எனும் அழகிய பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. இந்திய மற்றும் முகலாய கலை அம்சங்கள் சேர்ந்து உருவாகியுள்ள இந்த தோட்டத்தில் நீரூற்றுகள், காட்சி மாடங்கள் மற்றும் சிறு மண்டபங்கள்...
மோத்தி தூங்க்ரி அல்லது முத்து மலை என்று அழைக்கப்படும் இந்த மலை இங்குள்ள அரண்மனை மற்றும் கோயிலுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்து கோட்டை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இங்குள்ள அரண்மனை மஹாராஜா இரண்டாம் சவாய் மான் சிங் அவர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது....
ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை ஒரு பிரபலமான பாரம்பரியச் சின்னமாகும். இது இந்நகரத்திலுள்ள கம்பீரமான மாளிகைகளில் ஒன்று.
ஜெய்ப்பூர் நகரின் ஸ்தாபகரான மஹாராஜா சவாய் ஜெய் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ளது. ராஜபுதன மற்றும்...