தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் பல ஊர்களுடன் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 33ன் வழியாக மும்பை மற்றும் டெல்லியும், தேசிய நெடுஞ்சாலை 6ன் வழியாக கரக்பூர், கொல்கட்டா ஆகிய ஊர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகள், ஆட்டோ, ரிக்ஷா மூலம் பயண வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.