வளமையான வரலாறு மற்றும் கலையை கொண்ட காலாஹண்டி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். உட்டேய் மற்றும் டெல் நதிகள் சங்கமாகும் இடத்தில் உள்ள இந்த இடத்தில் பழமையான பல கோவில்கள் உள்ளன. 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவிலில் அருமையான கட்டடக் கலையை காண நேரிடலாம்.
ஓவியத்தை போல் உள்ள மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகிய நகரம் இது. கற்காலம் மற்றும் இரும்புக் காலத்திற்கான பல தொல்பொருள் ஆதாரங்கள் இந்த இடத்தில் கிடைத்துள்ளன.
இங்கு ஒவ்வொரு வருடமும் காலாஹண்டி உத்சவ் கொண்டாடப்படுகிறது. இந்த உத்சவத்தில் உலகளாவிய புகழ் பெற்ற இதன் கவின் கலைகள், பண்பாடு, இசை மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
காலாஹண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
காலாஹண்டி சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல அறிய மற்றும் அழகிய தலங்களை கொண்டுள்ளது. அவை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகவும் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களாகவும் விளங்குகின்றன.
2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் இங்குள்ள அசுர்கர் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. குடஹண்டி என்ற மலையில் அழகிய ஓவியங்களை கொண்ட குகைகள் பல உள்ளன.
ரபண்டர் என்ற ஒரு அழகிய நீர்வீழ்ச்சியும் உண்டு. மோகனகிரி என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் இயற்கை அழகுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு தான் லால் பகதூர் சாஸ்த்ரி விளையாட்டரங்கம் அமைந்திருக்கிறது. இங்கே பல விளையாட்டுக்களும் விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.
காலாஹண்டியை அடைவது எப்படி?
காலாஹண்டியை ஒடிசாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்தும் சுலபமாக வந்தடையலாம். இங்கு இரயில் மூலமாக வர வேண்டுமானால் கேசிங்கா இரயில் நிலையம் மூலமாக வரலாம். விமானம் மூலமாக இங்கே வர வேண்டுமானால் புவனேஷ்வர் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலாஹண்டிக்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த பருவம்
காலாஹண்டிக்கு மழைக்காலத்தின் போது சுற்றுலாவிற்கு வருவதே சிறப்பானதாக இருக்கும்.