அரியக்குடியிலுள்ள தென் திருப்பதி, காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான தென்னிந்தியக் கோயிலாகும். இங்கு மூலவராக வெங்கடாச்சலபதி விளங்குவதால், இக்கோயில் மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.
மூலக் கடவுள் “திருவேங்கடமுடையான்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். இக்கோயில் பாலாஜியின் பூலோக உறைவிடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமமாகும் என்று மக்கள் நம்புவதால், இது தென் திருப்பதி அல்லது தெற்கின் திருப்பதி என்றே அழைக்கப்படுகிறது.
தென் திருப்பதிக் கோயில், சிதைய ஆரம்பித்ததால், இது அண்மையில் மறுசீரமைப்புக்கு உள்ளானது. இதன் மூலத்தன்மையை, இம்மறுசீரமைப்பு கொஞ்சம் மாற்றியிருந்தாலும், இப்பணிகள், இக்கோயிலை வருங்கால சந்ததியினருக்கு, காப்பாற்றிக் கொடுத்ததினால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இங்கு, வடக்குப் பகுதியில் உள்ள “கல்கருடன்” என்றழைக்கப்படும் கருடன் சிலை, அதன் மூல வடிவிலேயே உள்ளது.
தினந்தோறும், ஒரு சிறப்பு பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கென்றே, பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இக்கோயிலுக்கு வருகின்றனர்.