தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141 கி.மீ. தொலைவில் மதுரை மற்றும் கிழக்கே 131 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் சூழ்ந்திருக்க கரூர் நகரம் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
1995ல் திருச்சிராப்பள்ளியில் பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. காவேரி, அமராவதி, நல்காசி, குடகனார் மற்றும் நொய்யல் போன்ற பல நதிகள் இந்த மாவட்டத்தில் பாய்ந்து செல்கின்றன.
கரூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள்
எண்ணற்ற பழங்கால கோவில்களுக்கு கரூர் பெயபெற்றது. இப்பட்டணம் ஏழு புனித சிவாலயங்களுள் ஒன்று. ஐந்தி அடி உயர லிங்கம் உடைய பசுபதீஸ்வரலிங்கம் கோவில் இப்பட்டணத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆகும்.
புகழிமலை ஸ்ரீ ஆறுபடை முருகன் கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ஸ்ரீ கரூவூர் மாரியம்மன் கோவில், நேரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவில், ஸ்ரீ சிர்டி சார் பாபா கோவில், ஸ்ரீ சோலையம்மன் கோவில், ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில், ஸ்ரீ வங்காளம்மன் கோவில், கல்யாண வெங்கடரமனா ஸ்வாமி கோவில், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சதாசிவா கோவில், அக்னீஷ்வரர் கோவில் ஆகியவை இங்குள்ள மற்ற புகழ்பெற்ற கோவில்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
தமிழ் நாட்டின் பழமைவாய்ந்த பட்டணங்களில் ஒன்றான கரூர் அதன் செல்வாக்கும் கலாச்சாரமும் நிறைந்த மரபுக்கு பெயர்பெற்றது. இதன் வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சங்ககாலத்தை சார்ந்தது.
சேரர்கள், கங்கையர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள், மைசூர் மற்றும் ஆங்கிலேயர்கள் என பல ராஜ்யங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கரூர் கண்டுள்ளது.
பல்வேறு கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் கரூரின் பெயர் கரூவூர், வாஞ்சி, ஆடிபுரம், பாப்பாதீசுரம், வாஞ்சி மூதுர திருவானிலை, வாஞ்சுலாரணியம், கருவைப்பட்டிணம், திரு விதுவக்கோட்டம், முடிவழங்கு வீரசோழபுரம், கர்பபுரம், காராபுரம், பாஸ்கரபுரம்,ம் ஆடக மாடம், ஷன்மஙல ஷேத்ரம், சேரமா நகர மற்றும் கரூரா என பல்வேறு வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சங்க காலத்தில் இவ்விடத்திற்கு ஆன்பொருணை என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது.
பிரம்மாவின் படைப்புப்பணி இவ்விடத்தில் இருந்து தான் தொடங்கியது என்று இந்து புராணம் கூறுகின்றது. இதன் காரணமாக இவ்விடம் ‘புனித பசுவின் இடம்’ என்று அழைக்கப்படுகின்றது. கரூர் அருகே உள்ள 6 நாட்டார் மலை கல்வெட்டுகள் சேர மன்னர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கின்றன.
இப்பட்டணம் நகை தயாரிக்கும் மையமாகவும், வணிக மையமாகவும் விளங்கி வருகின்றது. கிரேக்க அறிஞர் தாலெமி அவர்கள் தன்னுடைய குறிப்புகளில் கரூர் நகரை, கொரெவொரா என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ராஜ ராஜ சோழனின் ராஜகுருவாக கருதப்படும், திருவிசைப்பா பாடிய கருவூர் தேவர் கரூரில் பிறந்தவராவார். இத்தகு சிறப்பு வாய்ந்த நகரத்தை 1874 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஊராட்சியாக அறிவித்தார்கள்.
கரூரை அடைவது எப்படி?
கரூருக்கு நெருக்கமான உள்நாட்டு விமானநிலையங்கள் திருச்சியிலும், கோயம்புத்தூரிலும் இருக்கின்றன. அருகாமையில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் சென்னையில் இருக்கிறது.
நகரத்தின் மையத்தில் இருக்கும் கரூர் ரயில் நிலையம் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரூருக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, கரூர் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எளிதாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.
கரூரின் வானிலை
கரூரில் கோடைக்காலம் முகவும் வெப்பமாகவும், குளிர்க்காலம் மிதமாகவும், இனிமையாகவும் இருக்கின்றது. மழைக்காலத்தில், கரூர் மிதமான மழைப்பொழிவைப் பெறுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்க்காலமே, இப்பட்டணத்திற்கு பயணிக்க சிறந்த காலம் ஆகும்.