'கடவுள்களின் தேசம்' என்று சொல்லப்பட்ட முதன்மையான மடாலங்களின் கிராமமான 'கனம்' கின்னார் மாவட்டத்தில் உள்ளது. இந்த இடம் ரின்-சான்-சாங்-போ என்பவரால் கட்டப்பட்ட 7 பெரிய மற்றும் சிறிய மடாலயங்கள் மற்றும் உள்ளூர் கடவுளான டாப்லா-சு (ஜோ-சென்போஜி) –க்காகவும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த மடாலயங்களில் ஒன்று இந்த கிராமத்தின் உச்சிப் பகுதியில் கட்டப்பட்டு, 25 அறைகளை கொண்டதாக உள்ளது. சுற்றுலாப்பயணிகள் காஞ்சுர் மற்றும் டாஞ்சுர் என்று அறியப்படும் 'லாமனிஸம்' தொடர்பான என்சைக்லோபீடியாவை (கலைக்களஞ்சியம்) இங்கே காணலாம். இந்த மடாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு புத்தர்சிலை நீல நிற முடியுடன் இருப்பதை காண முடியும்.
நேஸ்ஸாங் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ள கனம் கிராமம் திபெத்திற்கு உள்ள மிகப்பழமையான வியாபார வழிகளில் ஒன்றாக இருந்திருக்கும்.



Click it and Unblock the Notifications