ஸ்பூவா என்றறியப்படும் 'ப்பூ' என்ற கிராமம் கின்னார் பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று, 2837மீ உயரத்தில் அமைந்துள்ளது. NH-22-ல் உள்ள போவாரி-யில் இருந்து 58 கிமீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
வாதுமை கொட்டை பழத்தோட்டங்கள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள், திராட்சை பழத்தோட்டங்கள் ஆகியவை இந்த இடத்தின் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கின்றன. இந்த இடத்தை நோக்கி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு இடம் இங்கிருக்கும் புத்தர் கோவிலாகும். இவர் புத்தர் அல்லது சாக்கியமுனி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
உள்ளூர் கடவுளான டாப்லாவிற்கு வசிப்பிடமோ, இருக்கையோ கிடையாது. இந்த கடவுளின் ஒரே அடையாளம், ஒரு தடியின் மேல் முனையில் காணப்படும் சிலைகளின் தொகுப்புகள் மட்டுமே.
இந்த சிறிய சிலையானது யாக் எருமையின் முடியைக் கொண்டும் மற்றும் சில வண்ணத் துணிகளின் துண்டுகளைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications