கிஷன்கர் மகாராஜாக்களின் ஆடம்பர மாளிகையாக விளங்கி வந்த ஃபூல் மஹால் அரண்மனை 1870-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கிஷன்கரின் நகர மையத்தில் இருக்கும் இந்த அரண்மனை தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக போட்டிக் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலின் அறைகள் எழில் ஓவியங்களாலும், பழமையான அரச மற்றும் பிரிட்டிஷ் தளவாடங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது. இங்கு வரும் பயணிகள் சுவை மிகுந்த இந்திய, சீன மற்றும் மேற்கத்திய உணவுகளை ருசித்து மகிழலாம்.
ஃபூல் மஹாலில் இயற்கையாக அமைந்திருக்கும் பசுமையான புல்வெளிகளும், மனித உழைப்பில் மேம்பட்டு விளங்கும் அரண்மனையின் கவின் கொஞ்சும் தோற்றம் எவரையும் சொக்க வைத்து விடும்.
இங்கு பயணிகளின் வசதிக்காக நூலகங்கள், ஜாக்கிங் பாதைகள், ஆடை வெளுப்பு நிலையங்கள் போன்றவை ஹோட்டல் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஹோட்டலில் ராஜஸ்தானிய இசை, நடனம் போன்ற ராஜஸ்தானிய கலை வடிவங்களை பயணிகள் அனுபவித்து லயிக்கலாம்.
அதோடு இளமை பொலிவோடு இருக்க விரும்பும் பயணிகளுக்கென்று இங்கு தினசரி யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. எனவே இப்படியொரு அற்புதமான இடத்தை தவற விட்டுவிடாதீர்கள்.