ஆங்கிலேய தொழிலதிபரான திரு.ஜான் ஹரால்டு அப்பாட் என்பவரின் பெயரையே அப்பாட் மலை தாங்கியுள்ளது. இந்த இடம் பனியை உடுத்தியிருக்கும் மாபெரும் இமயமலையின் காட்சிகளை அழகுற காட்டும் வசதியுள்ள இடமாகும்.
இந்த மலையின் மீதிருக்கும் 13 தனியார் குடில்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றில் ஒரு மாளிகையை, அடர்ந்த ஓக் மற்றும் மரங்களுக்கிடையில், 1914-ம் ஆண்டு திரு.ஜான் ஹரால்டு அப்பாட் கட்டியுள்ளார்.
சுற்றுலாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு விளையாட்டுகளும், நிகழ்வுகளும் இந்த இடத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இடத்திற்கு 3 கிமீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து மற்றும் மாரோரகான் அல்லது லோஹக்ஹாட் இடங்களில் இருந்து 7 கிமீ தூரம் பயணம் செய்தும் அடைந்திட முடியும்.
இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்தல், பறவைகளை கவனித்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுதுபோக்குகளை அனுபவித்திட முடியும்.



Click it and Unblock the Notifications